திருவொற்றியூர்: திருவொற்றியூரில் பைக் திருடிய ரயில்வே ஊழியரை போலீசார் கைது செய்தனர். திருவொற்றியூர் ஜீவன்லால் நகரை சேர்ந்தவர் நாகேந்திரன் (55). இவர், கடந்த 30ம் தேதி தனது பைக்கை திருவொற்றியூர் ரயில் நிலையம் அருகே உள்ள மேம்பாலத்திற்கு கீழ் நிறுத்தியபோது, திருடுபோனது. அதிர்ச்சியடைந்த நாகேந்திரன் இதுகுறித்து திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், அயனாவரம் பகுதியை சேர்ந்த விஜயகாந்த் (45) என்பவர் பைக் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது.
