அம்பத்தூரில் லாரியை திருடிய டிரைவர் கைது

ஆவடி: அம்பத்தூர் பாலாஜிநகர் பகுதியைச் சேர்ந்தவர் பாரத் (35). இவர் அம்பத்தூர் அருகே டிரான்ஸ்போர்ட் நிறுவனல் மேலாளர். இவரது நிறுவனத்தில் 25 லாரிகள் உள்ளன. கடந்த வருடம் அக்டோபர் மாதம் 17ம் தேதி, இங்கிருந்த ஒரு லாரி மட்டும் காணாமல் போனது. லாரியை ஓட்டுனராக பணியாற்றிய அம்பத்தூர் கள்ளிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த சிலம்பரசன் (35) என்பவர் திருடி சென்றது தெரியவந்தது. உடனே பாரத், திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் வழக்குப் பதிவுசெய்து போலீசார் லாரியை தேடினர். இந்நிலையில் திருடப்பட்ட அந்த லாரி கடந்த வருடம் அக்டோபர் 18ம் தேதி ஜிபிஎஸ் மூலமாக மயிலாடுதுறை செக் போஸ்ட் அருகில் போலீசார் பறிமுதல் செய்தனர். லாரியை அங்கு நிறுத்திவிட்டு, சிலம்பரசன் தப்பிச் சென்றுவிட்டார். பின்னர் திருமுல்லைவாயல் போலீசார் சிலம்பரசனை தீவிரமாக தேடினர்.  இந்தநிலையில், நேற்று முன்தினம் சீர்காழியில் சிலம்பரசனை போலீசார் கைதுசெய்தனர். பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அவரை புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: