சென்னை: தி.நகரில் சர்வீஸ் அபார்ட்மெண்டில் பாலியல் தொழில் நடத்தி வந்த பாலியல் புரோக்கரை போலீசார் கைது செய்தனர். சென்னை தி.நகர் நரசிம்மா சாலை 1வது ெதருவில் உள்ள சர்வீஸ் அபார்ட்மெண்டில் சந்தேகத்திற்கு இடமான வகையில் பலர் வந்து செல்வதாக விபசார தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி விபசார தடுப்பு பிரிவு போலீசார் நேற்று முன்தினம் சம்பந்தப்பட்ட சர்வீஸ் அபார்ட்மெண்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரியவந்தது. தொடர்ந்து, போலீசார் பிரபல பாலியல் புரோக்கர் திருவாரூர் மாவட்டம் பதூர் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (26) என தெரியவந்தது. இவர், தேனாம்பேட்டையில் மெட்ராஸ் மெட்ரோ ரெசிரேஷன் கிளப் உரிமையாளர் இளையராஜா என்பவரின் உதவியாளர் என தெரியவந்தது.