கொல்கத்தா: சிறைகளில் சீர்திருத்த பணி மேற்கொண்டதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மேற்குவங்க முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி பாராட்டு தெரிவித்திருக்கிறார். தமிழ்நாட்டில் உள்ள சிறைகளில் கனரக சலவை இயந்திரம் வழங்கியது மிகவும் பாராட்டுக்குரியது. பெண் சிறைவாசிகளுக்கு உதவும் வகையில் கனரக சலவை இயந்திரம் வழங்கியுள்ளது முன்மாதிரி நடவடிக்கையாகும். சிறைச்சாலைகளில் கனரக சலவை இயந்திரங்கள் வழங்கியது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.