முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாளை ஒட்டி அவரது படத்துக்கு இபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை

சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாளை ஒட்டி அவரது சிலைக்கு இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் வெற்றி பெற்ற பிறகு இன்று அதிமுக தலைமை அலுவகத்தில் இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு, தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு விமரிசையாக கொண்டாடும் வகையில் அதிமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன் ஓர் அங்கமாக அதிமுக தலைமை அலுவகத்தில் உள்ள ஜெயலலிதாவின் உருவ சிலைக்கு இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் தம்பிதுரை, ஜெயக்குமார், வளர்மதி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். எடப்பாடி பழனிசாமி எம்ஜிஆர் சிலைக்கும் மாலைஅணிவித்து அதிமுக கொடியை தலைமை அலுவலகத்தில் ஏற்றி வைத்தார்.

இதேபோல் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாளையொட்டி அவரது படத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் மரியாதையை செலுத்தினார். சென்னை கடற்கரை காமராஜர் சாலை உயர்கல்வி மன்ற வளாகத்தில் உள்ள சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.

Related Stories: