புதுடெல்லி: நாடு முழுவதும் என்ஐஏ நடத்திய சோதனையில் காலிஸ்தான் தீவிரவாதியின் கூட்டாளி உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். கிரிமினல்கள், போதை பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் தீவிரவாதிகள் இடையேயான தொடர்பு குறித்து தேசிய புலானய்வு அமைப்பு(என்ஐஏ) விசாரித்து வருகிறது. இந்நிலையில். பஞ்சாப், அரியானா,டெல்லி,ராஜஸ்தான்,உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட 8 மாநிலங்களில் 76 இடங்களில் என்ஐஏ நேற்று அதிரடி சோதனை நடத்தியது. இச்சோதனையில் ராஜஸ்தான் மாநிலம் கங்காநகர் மாவட்டத்தில் லக்கி கோக்கர் என்ற டெனிசை என்ஐஏ கைது செய்தது.