மதுரை : ஜெயலலிதாவுக்காக கட்டப்பட்ட கோவிலுக்கு சென்று வழிபட்டேன். அற்புதமான செய்தி வந்தது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குறித்து மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே திருமண விழாவில் பேசிய எடப்பாடி பழனிசாமி, மதுரை மண்ணை மிதித்தாலே நல்லது கிடைக்கும் வெற்றி கிடைக்கும் என்பது நிரூபணம் ஆகியுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை நினைத்து இரவு தூக்கமே வரவில்லை; தீர்ப்பு எப்படி இருக்குமோ என பயந்தேன். உச்சநீதிமன்ற தீர்ப்பு சாதகமாக வெளியானதால் மகிழ்ச்சி அடைந்துள்ளேன்.