கர்நாடகா: இன்னும் 3 மாதங்களில் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் எடியூரப்பாவின் வலதுகையாக விளங்கிய தம்மய்யா காங்கிரஸ் கட்சியில் தம்மை இணைத்து கொண்டுள்ளார். தனது ஆதரவாளர்களுடன் காங்கிரஸ் கட்சியில் தம்மய்யா இணைந்து இருப்பது ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இவர் எடியூரப்பாவின் மிக நெருங்கிய நண்பர் மட்டுமல்லாது பாரதிய ஜனதாவின் தேசிய பொதுச்செயலாளரும், சிக்கமகளூரு எம்,எல்.ஏ., சிடி.ரவியின் நீண்டகால நண்பரும் ஆவார். தற்போது தனது ஆதரவாளர்களுடன் காங்கிரஸ் கட்சிக்கு தம்மய்யா சென்றிருப்பதால் அவர் சார்ந்துள்ள லிங்காயத்து சமூக வாக்குகள் பிரிக்கப்படலாம் என்று தெரிகிறது.