இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், ‘அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் எனது டெல்லி வீட்டை கறுப்பு மையால் நாசப்படுத்தி உள்ளனர். டெல்லி காவல்துறையிடம் தொடர்பு கொண்ட போது, இதுகுறித்து அவர்கள் எதுவும் கூறவில்லை. எம்பிக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்படுமா? இல்லையா? என்பதை உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், சபாநாயகர் ஓம் பிர்லாவும் உறுதிபடுத்த வேண்டும். தாக்குதல் நடத்தியவர்கள் என்னை பயமுறுத்தவில்லை. அவர்கள் சாவர்க்கர் மாதிரியான கோழைத்தனமாக செயல்பட்டுள்ளனர். கறுப்பு மை அல்லது கற்களை எறிந்துவிட்டு ஓடாதீர்கள்’ என்று கூறியுள்ளார். ஒவைசி வீட்டின் மீது மர்ம நபர்கள் கறுப்பு மை வீசிவிட்டு சென்ற சம்பவம் குறித்து டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post ஐதராபாத் எம்பியான ஒவைசியின் வீட்டின் மீது கறுப்பு மை வீச்சு: அமித் ஷா, ஓம் பிர்லா மீது அதிருப்தி appeared first on Dinakaran.