அண்ணாநகர்: கோயம்பேடு காய்கறி, பழம், பூ, உணவு தானியம் ஆகிய மார்க்கெட்டில் அங்காடி நிர்வாகம் சார்பில் காவலாளிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதில், கோயம்பேடு மார்க்கெட் 3ம் நம்பர் கேட்டில், பீகார் மாநிலத்தை சேர்ந்த ரகுபதி (44) என்பவர் காவலாளியாக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம்போல் ரகுபதி பணியில் இருந்துள்ளார். அப்போது, போதையில் பைக்கில் வந்த 2 பேர், மார்க்கெட்டுக்குள் நுழைய முயன்றுள்ளனர். அவர்களை மடக்கிய ரகுபதி, நேரம் முடிந்துவிட்டதால் உள்ளே செல்லக்கூடாது என கூறியுள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.