ஜம்மு: காஷ்மீர் போலீஸ் டிஎஸ்பியாக இருந்த தேவேந்திர சிங், கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி 11ம் தேதி, காஜிகுந்த் பகுதியில் பாகிஸ்தானின் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகளுடன் காரில் சென்ற போது போலீசார் சோதனையில் சிக்கினார். இந்தியாவில் நாச வேலைகளை செய்த தீவிரவாதிகளுக்கு டிஎஸ்பி தேவேந்திர சிங் உதவியதாக கைது செய்யப்பட்டார்.