தீவிரவாதத்திற்கு உதவிய காஷ்மீர் மாஜி டிஎஸ்பியின் 3 வாகனங்களை பறிமுதல் செய்தது என்ஐஏ

ஜம்மு: காஷ்மீர் போலீஸ் டிஎஸ்பியாக இருந்த தேவேந்திர சிங், கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி 11ம் தேதி, காஜிகுந்த் பகுதியில் பாகிஸ்தானின் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகளுடன் காரில் சென்ற போது போலீசார் சோதனையில் சிக்கினார். இந்தியாவில் நாச வேலைகளை செய்த தீவிரவாதிகளுக்கு டிஎஸ்பி தேவேந்திர சிங் உதவியதாக கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது. இந்நிலையில், தேவேந்திர சிங் மற்றும் இந்த வழக்கில் கைதானவர்கள் தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்திய 3 வாகனங்களை தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனர்.

Related Stories: