புதுடெல்லி: மாநிலங்கள் சம்மதித்தால் ஜிஎஸ்டி வரியின் கீழ் பெட்ரோல், டீசல் கொண்டு வரப்படும் என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். டெல்லியில் தொழில்துறையினரிடையே நேற்று உரையாற்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: சரக்கு மற்றும் சேவை வரியின்கீழ் பெட்ரோலிய பொருட்களை சேர்ப்பது குறித்து மாநிலங்களுக்கு இடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டால் மட்டுமே செயல்படுத்த முடியும். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. எனக்கு முன்பு நிதியமைச்சராக இருந்தவர் அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வைத்து விட்டு சென்றுள்ளார். எனவே அதை அமல்படுத்துவதில் கடினம் இல்லை.