மும்பை: பிபிசி மும்பை மற்றும் டெல்லி அலுவலகங்களில் ஐ.டி சோதனை நடத்தியதற்கு மும்பை செய்தியாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. லண்டனை தலைமை இடமாக கொண்டு செயல்படும் பிபிசி செய்தி நிறுவனத்தின் டெல்லி மற்றும் மும்பை அலுவலகங்களில் நேற்று காலை 11.30 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். விடிய விடிய நடத்திய சோதனையில் ஊழியர்களின் செல்போன்கள் மற்றும் மடிக்கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வுக்குட்படுத்தபட்டன. 2-வது நாளாக இன்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனைகளை தொடர்ந்துள்ளனர்.