மணவூர் ரயில் நிலைய சாலையில் 8 கடைகளில் கொள்ளை: வியாபாரிகள் அச்சம்

திருத்தணி: திருவாலங்காடு பகுதியில் அடுத்தடுத்து 8 கடைகள் உடைத்து கொள்ளையடிக்கப்பட்டுள்ளதால் வியாபாரிகள் பீதி அடைந்துள்ளனர். திருத்தணி அருகே திருவாலங்காடு செல்லும் சாலையில் உள்ள ஸ்வீட் கடை, பங்க் கடை, ரியல் எஸ்டேட் அலுவலகம் மற்றும் பேரம்பாக்கம் செல்லும் சாலையில் உள்ள மளிகை கடை, போட்டோ ஸ்டுடியோ மற்றும் பஞ்சர் கடை உட்பட 8 கடைகளின் ஷட்டர் பூட்டை மர்ம நபர்கள் உடைத்துள்ளனர்.

இதன்பின்னர் ராமதாஸ் என்பவருக்கு சொந்தமான மளிகை கடையில் 10 ஆயிரம், பஞ்சர் கடையில் 2 ஆயிரம் ரூபாய் கொள்ளையடித்துள்ளனர். அத்துடன் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மளிகை பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர். சில கடைகளின் பூட்டை உடைக்க முடியாமல் பாதியில் விட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின்படி, திருவாலங்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனால் வியாபாரிகள் பீதி அடைந்துள்ளனர்.

Related Stories: