கும்மிடிப்பூண்டி அருகே பரபரப்பு: 4 ஏக்கர் மாஞ்செடிகளை வெட்டி வீசிய கொடூர நபருக்கு போலீசார் வலைவீச்சு

கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆத்துப்பாக்கம் ஆண்டார் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (63). இவர் அதே பகுதியில் சுமார் 8 ஏக்கர் பரப்பளவில் நெல், தர்ப்பூசணி, வேர்க்கடலை பயிரிட்டுள்ளதுடன் மாஞ்செடி வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் வளர்க்கப்பட்ட மாஞ்செடிகளை நேற்றிரவு மர்ம நபர்கள் நேற்று வீசியுள்ளனர். வழக்கம்போல் இன்று அதிகாலை நிலத்துக்கு வந்த ஆறுமுகம், சுமார் 4 ஏக்கரில் உள்ள மாஞ்செடிகள் வெட்டி சாய்க்கப்பட்டு கிடப்பது பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்ததுடன் கதறி அழுதுள்ளார்.

அத்துடன் மாஞ்செடிகளை கையில் தூக்கிவைத்து கண்ணீர் வடித்தார்.இதுகுறித்து ஆறுமுகம் கொடுத்த புகாரின் அடிப்படையில், கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குபதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். விவசாயிகளுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளதா என்று விசாரிக்கின்றனர்.

Related Stories: