புதுடெல்லி: பிரதமர் மோடி நேற்று முன்தினம் மாநிலங்களவையில் ேபசும்போது ஏற்பட்ட அமளியை காங்கிரஸ் எம்பி ரஜனி அசோக்ராவ் பாட்டீல் செல்போனில் படம் எடுத்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் எச்சரிக்கை விடுத்தார். இந்நிலையில், ரஜினி அசோக்ராவை பட்ஜெட் கூட்ட தொடரின் எஞ்சிய நாட்கள் வரை சஸ்பெண்ட் செய்வதற்கான தீர்மானம் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.