டெலிகாலர் என்ற பெயரில் இளம்பெண்களை ஏமாற்றி பாலியல் தொழில் நடத்திய 2 புரோக்கர்கள் கைது: கிளப் நிர்வாகிகளுக்கு வலை

சென்னை: தேனாம்பேட்டை அண்ணாசாலையில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் மசாஜ் சென்டர் பெயரில் பாலியல் தொழில் நடப்பதாக விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி விபச்சார தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார், அந்த அடுக்குமாடி கட்டிடத்தின் 6வது மாடியில் உள்ள மசாஜ் சென்டரில் அதிரடி சோதனை நடத்தினர்.

அதில், இளம்பெண்களை வைத்து மசாஜ் சென்டர் என்    ற பெயரில் பாலியல் தொழில் நடத்தியது தெரியவந்தது. மேலும், மசாஜ் சென்டருக்கு வரும் வாடிக்கையார்களை அங்குள்ள தனியார் கிளப் ஒன்றிற்கு அனுப்பி பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்தது. பாலியல் தொழில் நடத்தி வந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த சஞ்சீப்  ராய் மற்றும் பெங்களூரு மாநிலத்தை சேர்ந்த வினோத்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 5 வெளிமாநில பெண்கள் மீட்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட 2 புரோக்கர்களிடம் விசாரணை நடத்திய போது, பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. அதே கட்டிடத்தில் இயங்கி வரும் தனியார் கிளப்பின் நிர்வாக இயக்குநர் இளையராஜா மற்றும்  பொது மேலாளர் ஜோசப் ஆகியோர் மசாஜ் சென்டர் நடத்தி வந்த 2 பேருக்கும் பணம் கொடுத்து, அவர்களின் வாடிக்கையாளர்களுக்கு ஆசை வார்த்தை கூறி, பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்தது.

ேமலும், தனியார் கிளப்பின் பொது மேலான் இயக்குநர் இளையராஜா மற்றும் பொது மேலாளர் ஜோசப் ஆகியோரை பாலியல் தொழிலுக்காக கிளப்பிலேயே தனியாக டெலிகாலர் என்ற பெயரில் இளம் பெண்களை வேலைக்கு அமர்த்தி அவர்கள் மூலம் வாட்ஸ் அப் மற்றும் பல்வேறு மசாஜ் சென்டர்களுக்கு வரும் வாடிக்கையார்களின் எண்களை பெற்று அவர்களிடம், இளம் பெண்கள் இருப்பதாக நட்சத்திர ஓட்டல்களில் அறை புக் செய்து பெரிய அளவில் பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்தது.

இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள தனியார் கிளப் நிர்வாகிகள் 2 பேரை விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். மீட்கப்பட்ட வடமாநில இளம் பெண்கள் உட்பட 5 பெண்களை நீதிமன்றம் உத்தரவுப்படி அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Related Stories: