கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இந்த போர் ஒரு ஆண்டை நெருங்கியும் தொடர்கிறது. இதனால் உலக அளவில் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் ரஷ்யாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒலிம்பிக் போட்டியில் ரஷ்யாவுக்கு தடை விதிக்கவேண்டும் என உக்ரைன் டென்னிஸ் வீராங்கனையும், ஒலிம்பிக் வெண்கலப் பதக்கம் வென்றவருமான எலினா ஸ்விடோலினா தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், , 2024ல் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற உள்ள ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இருந்து ரஷ்ய மற்றும் பெலாரஷ்ய வீரர்களுக்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும்.