திருமலை: தெலங்கானாவில் சுற்றுச்சூழலை பாதுகாக்க மின்சார டபுள் டக்கர் பேருந்துகள் வருகிற 11ம் தேதி பயன்பாட்டிற்கு வர உள்ளது. ஐதராபாத்தில் பயன்படுத்துவதற்காக 3 மின்சார இரட்டை அடுக்கு பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளது. இந்த பேருந்தில் டிரைவருடன் சேர்த்து 65 பேர் அமரக்கூடிய வசதி உள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 150 கி.மீ பயணிக்க முடியும். 2 முதல் 2.5 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் ஆகிவிடும்.