பெரம்பூர்: வியாசர்பாடி சாஸ்திரி நகர் 11வது தெருவை சேர்ந்தவர் அப்புனு. இவர், வாட்ச்மேன் வேலை செய்து வருகிறார். இவரது, மனைவி கண்ணகி. இவர்களுக்கு அஜய் (எ) லூசு அஜய் (22) என்ற மகன் உள்ளார். இவர், ரயில்வே ஒப்பந்த பணிகளில் கூலி வேலை செய்து வந்தார். போதைக்கு அடிமையானதால் வேலையை விட்டு ஒப்பந்ததாரர்கள் நிறுத்திவிட்ட நிலையில், தற்போது வேலை இல்லாமல் இருந்து வருகிறார்.
இந்நிலையில், அஜய் அடிக்கடி குடித்துவிட்டு தன் தாயிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபடுவது வழக்கம். நேற்று முன்தினம் தந்தை அப்புனு வேலைக்கு சென்றிருந்த நிலையில், அஜய் குடிபோதையில் தாயிடம், குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டிருந்தார். அப்போது, திடீரென்று பீர்பாட்டிலை உடைத்து, தாயின் தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் கொடூரமாக குத்தினார்.