டெல்லி: தமிழ்நாட்டின் பாதுகாப்பு தொழில்துறை வழித்தடம் ரூ.3,861 கோடி முதலீடுகளை பெற்றுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் பாதுகாப்பு தொழில்துறை வழித்தடம் தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி தலைவரும், எம்.பியுமான அன்புமணி ராமதாஸ் நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் கேள்வி எழுப்பினார். அதற்கு ஒன்றிய பாதுகாப்பு துறை இணையமைச்சர் அஜய் பட் அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் தமிழ்நாடு பாதுகாப்பு தொழில்துறை வழித்தட வளர்ச்சிகாக மாநில அரசுக்கு ஒன்றிய அரசு உறுதுணையாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.