திருச்சி: நீர்த்தேக்க தொட்டியில் மனிதக்கழிவுகள் கலந்த விவகாரம் தொடர்பாக திருச்சி சிபிசிஐடி அலுவலகத்தில் நேற்று 8 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் இறையூர் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவுகள் கலந்தது தொடர்பாக வெள்ளனூர் போலீசார் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து, சிபிசிஐடி எஸ்பி தில்லை நடராஜன் புதுக்கோட்டையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக தனிப்படை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இறையூர் கிராமத்தில் சிபிசிஐடி தனிப்படை போலீசார் வீடு-வீடாக சென்று விசாரணை நடத்தினர்.