திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூர் அருகே வலப்பாடு பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (46). கூலித் தொழிலாளி. கடந்த 2019ம் ஆண்டு அந்த பகுதியை சேர்ந்த ஒரு வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். பின்னர் தனியாக இருந்த 8 வயது சிறுமியை பலாத்காரம் செய்துவிட்டு தப்பிச் சென்றார். இந்த சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் திருச்சூர் போலீசில் புகார் செய்தனர்.