கூடலூர் : கூடலூர் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து பணம், மதுபாட்டில்களை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ளது காளம்புழா. இங்குள்ள டாஸ்மாக் கடை கடந்த 4ம் தேதி இரவு ஊழியர்கள் பூட்டிச்சென்றனர். அடுத்த நாள் (5ம் தேதி) வள்ளலார் தினம் என்பதால் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. நேற்று வழக்கம்போல் கடையை திறக்க ஊழியர்கள் வந்தனர். அப்போது கடையின் கேட் உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த அவர்கள் இது குறித்து கூடலூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.