ஜெய்ப்பூர்: `` இந்திய இளைஞர்களால் முடியாதது எதுவுமில்லை. அவர்கள் விளையாட்டு துறையில் சிறந்து விளங்க ஒன்றிய அரசு ஊக்குவிக்கிறது,’’ என்று பிரதமர் மோடி கூறினார். ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூரில் `ஜெய்ப்பூர் மகா விளையாட்டு விழா’வுக்கு அத்தொகுதியின் மக்களவை எம்பி.யும் முன்னாள் ஒன்றிய விளையாட்டுத் துறை அமைச்சருமான ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் ஏற்பாடு செய்திருந்தார். இந்தாண்டு கருப்பொருளாக கபடியை மையமாகக் கொண்டு கடந்த மாதம் 12ம் தேதி தொடங்கிய இந்த விளையாட்டு விழாவில், 6,400க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.