சென்னை: ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அலாவுதீன் (27), வாகித் (25). சகோதரர்களான இவர்கள், இருவரும் கூட்டாக தமிழ் சினிமா நடிகர் கனா தர்ஷன்’ புகைப்படத்தை பயன்படுத்தி, அவரின் பெயரிலேயே முகநூலில் போலி கணக்கு உருவாக்கி உள்ளனர். அதன்மூலம், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு நட்புக்காக அழைப்பு அனுப்பி அதை அப்பெண் ஏற்றவுடன், அவருடன் நன்றாக பேசி பழகி அப்பெண்ணின் வாட்ஸ்-அப் எண்ணை பெற்று வாட்ஸ் அப் மூலமாக தகவல்களை பரிமாறிக் கொண்டுள்ளனர். மேலும், வீடியோ கால் பேசி அப்பெண்ணின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை ஸ்கிரீன் ஷாட் எடுத்து வைத்துக்கொண்டு அப்பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அந்த பெண் பணம் தர மறுத்ததால் அப்பெண்ணின் புகைப்படங்களை மார்பிங் செய்து சமூக வலைதளத்தில் பகிர போவதாக பிரட்டியதால் அதிர்சசி அடைந்து ரூ.2 லட்சத்திற்கும் மேலாக பணத்தை ஜிபே மூலமாக அனுப்பி உள்ளார்.