வாணியம்பாடி: கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் பலியான சம்பவத்தில் கைதான தனியார் நிறுவன உரிமையாளர் சிறையில் அடைக்கப்பட்டார். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் நேற்று முன்தினம் தனியார் நிறுவனத்தின் சார்பில், நடைபெற்ற இலவச புடவைகளுக்கான டோக்கன் வழங்கும் நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 4 மூதாட்டிகள் பரிதாபமாக பலியாகினர். மேலும், 12 பெண்கள் பலத்த காயமடைந்து வாணியம்பாடி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.