குர்கிராம்: அரியானாவில் விபத்தில் சிக்கிய பைக்கை, 4 கி.மீ தூரம் கார் இழுத்து செல்லும் போது தீப்பொறி பறந்ததால் மக்கள் பீதியடைந்தனர். அரியானா மாநிலம் குர்கிராமின் செக்டர் 65 காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட செக்டார் 62 பகுதியில், 2 இளைஞர்கள் பைக்கில் தங்களது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களின் பின்னால் வேகமாக வந்த கார், பைக்கில் வந்த இளைஞர்கள் மீது மோதியது. இதனால் இருவரும் சாலையில் விழுந்தனர். ஆனால் காயமின்றி தப்பினர். அப்போது, காரின் முன்பகுதியில் பைக் சிக்கியது. இந்த சம்பவத்திற்குப் பிறகு, காரின் ஓட்டுநர் காரை நிறுத்தாமல், வேகமாக ஓட்டத் தொடங்கினார். இதனால் காருக்கு முன்னால் சிக்கிய பைக் சாலையில் இழுத்துச் செல்லப்பட்டது.