திருமலை: தெலங்கானா மாநில ஒய்எஸ்ஆர் கட்சியின் தலைவர் ஷர்மிளா நேற்று முதல்வர் சந்திரசேகர ராவுக்கு (கேசிஆர்) பரிசாக அனுப்புவதாக கூறி ஒரு ஜோடி ஷூக்களை ஐதராபாத்தில் நிருபர்களிடம் காண்பித்தார். அப்போது அவர் கூறியதாவது: தனது ஆட்சி அற்புதமாக இருப்பதாக முதல்வர் சந்திரசேகரராவ் கூறி வருகிறார். தெலங்கானாவில் எந்த பிரச்னையும் இல்லை என நிரூபித்தால் நான் அரசியலில் இருந்து விலகுகிறேன். இது உண்மை இல்லை என்றால் முதல்வர் சந்திரசேகரராவ் மக்களிடம் மன்னிப்பு கேட்டு முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும்.