ஈரோடு சம்பத் நகரில் திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணியின் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்த அமைச்சர் செஞ்சி மஸ்தான், மங்கள வாத்தியங்களை வாசித்த கலைஞர்களை அழைத்து, அவர்களை பாராட்டினார். தொடர்ந்து, அவர்களிடம் இருந்து தவிலை வாங்கி அமைச்சர் செஞ்சி மஸ்தான் வாசித்து பிரசாரம் செய்தார். உடன் இருந்த எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் நாதஸ்வரம், சலங்கை ஓசை தரும் கருவியை இசைத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.