ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் 66 ஆண்டாக ஓய்வூதியம் பெற்ற 100 வயதுடைய முன்னாள் ராணுவ வீரர் உடல்நலக் குறைவால் காலமானார். ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு என்ற போட்கி கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் பாய்ட்ராம் துடி (100). இவருக்கு சந்தா தேவி சாய்னா (92) என்ற மனைவியும், தரம்வீர் மற்றும் முகந்தரம் என்ற இரண்டு மகன்களும், தரம்வீர், சத்யபிரகாஷ், முகேஷ், சுர்ஜித் ஆகிய நான்கு பேரன்களும் உள்ளனர். இந்நிலையில் நேற்று உடல்நலக் குறைவால் பாய்ட்ராம் துடி காலமானார். இவரது மறைவால் கிராம மக்கள் சோகமடைந்தனர்.