டெல்லி: 3 ஆண்டுகளில் ஒரு கோடி விவசாயிகள் இயற்கை விவசாயத்துக்கு மாறுவதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கடலோர பகுதிகளில் மாங்குரோவ் காடுகள் வளர்ப்பு திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்படும். ஒரு கோடி விவசாயிகளை இயற்கை விவசாயத்தில் ஈடுபடுத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.