கொல்கத்தா: ஒன்றிய பட்ஜெட்டில் வருமானவரி விலக்கு உச்ச வரம்பை மாற்ற வேண்டும் என்று முன்னாள் நிதிய மைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்து உள்ளார். ஒன்றிய அரசின் கடைசி முழுபட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. இதுபற்றி முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியதாவது: 2024 பொதுத் தேர்தலுக்கு முன் மோடி அரசின் கடைசி பட்ஜெட் குறித்து எனக்கு மிகுந்த எதிர்பார்ப்புகள் உள்ளன. ஆனால் இந்த அரசின் முந்தைய வரவு செலவுத் திட்டங்களின் கடந்த கால அனுபவத்தின் மூலம் பார்த்தால் பெரும் ஏமாற்றம் மட்டுமே இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த பட்ஜெட்டில் பணவீக்கத்தை கட்டுப்படுத்தி வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் அரசு கவனம் செலுத்த வேண்டும். மக்களுக்கு உடனடி நிவாரணமாக கைகளில் அதிக பணப்புழக்கத்திற்கு வழிவகை செய்ய வேண்டும்.