சேத்தியாத்தோப்பு: என்.எல்.சி. நிர்வாகத்துக்கு எதிராக 7 கிராமங்களில் விவசாயிகள் நேற்று தங்களது வீடுகளில் கருப்பு கொடியை ஏற்றி எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம், நெய்வேலி என்.எல்.சி. நிர்வாகம் சுரங்க விரிவாக்க பணிக்காக நிலம் மற்றும் வீடுகளை கையகப்படுத்த முனைப்பு காட்டுகிறது. தற்போது மத்திய, மாநில அரசின் ஒப்புதலோடு சமீபத்தில் ஏக்கர் ஒன்றுக்கு 25 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்குவதாக அறிவிப்பை வெளியிட்டது என்.எல்.சி. நிர்வாகம். 2000ம் ஆண்டு முதல் நிலங்கள் கொடுத்த விவசாயிகளுக்கு அப்போது 6 லட்ச ரூபாய் அறிவித்தது என்.எல்.சி. நிர்வாகம்.