ராஜபாளையம்: ராஜபாளையத்தில் சிட்பண்ட்ஸ் நடத்தி ரூ.10 கோடி மோசடி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் சிட்பண்ட்ஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் ‘பிடி டெக்ஸ்’ என்ற பெயரில் 7 பேர் பங்குதாரர்களாக கொண்டு, டெக்ஸ்டைல்ஸ் நடத்தி வருகின்றனர். அதில் சிட்பண்ட்சும் நடத்தி வந்தனர். இதன்மூலம் கடந்த 40 ஆண்டு காலமாக அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் சீட்டு பணம் வசூல் செய்துள்ளனர். இந்நிலையில், கடந்த ஓராண்டு காலமாக 85 நபர்களுக்கு மேல் ரூ.10 கோடி வரை சீட்டுப்பணம் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளனர்.