சத்தியமங்கலம்: வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் சென்ற ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறங்கியது. சத்தியமங்கலம் புலிகள் காப்பதாகத்திற்குட்பட்ட கடம்பூர் மலை பகுதியில் உகினியம் என்ற கிராமத்தில் அங்குள்ள அரசு உயர்நிலை பள்ளியின் வளாகத்தில் இன்று காலை சரியாக 10.30 மணியளவில் ஹெலிகாப்டர் திடீரென அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. பெங்களூருவில் இருந்து திருப்பூர் நோக்கி சென்ற போது மோசமான வானிலை காரணமாக தரையிறங்கியது.