புதுடெல்லி: பெரா முறைகேட்டு வழக்கில் டி.டி.வி.தினகரனுக்கு எதிரான விசாரணை ஆவணங்களை சீலிடப்பட்ட கவரில் மூன்று வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டி.டி.வி.தினகரன் இங்கிலாந்தில் உள்ள பார்க்லே வங்கியில் 1 கோடியே 4 லட்சத்து 93 ஆயிரம் அமெரிக்க டாலரை முறைகேடாக டிப்பர் இன்வேஸ்மெண்ட் மூலமாக டெபாசிட் செய்ததாக அவர்மீது குற்றம்சாட்டப்பட்டது. இதனையடுத்து கடந்த 1996ம் ஆண்டு அமலாக்கதுறை டிடிவி.தினகரன் மீது வழக்கு பதிவு செய்தது. இதனையடுத்து கடந்த 1996ம் ஆண்டு அமலாக்கதுறை டிடிவி.தினகரன் மீது வழக்கு பதிவு செய்தது.