வியாரா,குஜராத்: குஜராத்தில் பசு மாடுகளை பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்ல கடும் சட்டவிதிகள் உள்ளன. இதனை மீறி குஜராத்தில் இருந்து மகாராஷ்டிராவுக்கு பசு, காளை மாடுகளை கடத்தி சென்ற 22 வயது இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி சமீர் வியாஸ் தீர்ப்பளித்தார். கடந்த 2022 நவம்பர் மாதம் அளிக்கப்பட்ட இந்த தண்டனை விவரம் தற்போது வௌியாகி உள்ளது. பசுக்களை வெட்டுவது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள அவர், “பசு ஒரு விலங்கு மட்டுமல்ல. அது நமது தாய். அதை வதைப்பது சரியல்ல. பசுவின் கோமியம் தீராத பல நோய்களையும் குணப்படுத்தக் கூடியது.