புதுடெல்லி: இந்திய கடற்படையின் போருக்கான தயார்நிலை குறித்த `ட்ராபெக்ஸ்’ எனப்படும் போர் ஒத்திகை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜனவரி முதல் மார்ச் வரையிலான கால கட்டத்தில் நடத்தப்படுகிறது. இந்தாண்டுக்கான போர் ஒத்திகை இந்திய பெருங்கடலில் நேற்று தொடங்கியது. இதன்போது, ஏவுகணை போர் கப்பல்கள், நீர் மூழ்கி கப்பல்கள், சிறிய போர் கப்பல்கள், விமானம் தாங்கி போர் கப்பல்கள் உள்ளிட்ட அனைத்து வகை போர் கப்பல்களும் பயன்படுத்தப்படுகின்றன.