தமிழகம் கோவையில் தனியார் மருத்துவமனை ஊழியர்களிடம் சிகிச்சை விவரம், ரசீது கேட்டு கொரோனா நோயாளியின் உறவினர்கள் தகராறு!: 7 பேர் மீது வழக்குப்பதிவு..!! Jun 25, 2021 கொரோனா கோவா கோவை கோவை தின மலர் கோவை: கோவையில் தனியார் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் கொரோனா நோயாளியின் உறவினர்கள் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் கடந்த மாதம் 24ம் தேதி சிந்தராபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஆரிச்சாமி சிகிச்சை பலன் தராமல் அடுத்த 4 நாட்களில் இறந்துவிட்டார். ஒரு மாதத்திற்கு பிறகு நேற்று மருத்துவமனைக்கு வந்த ஆரிச்சாமியின் உறவினர்கள், கொரோனா சிகிச்சை விவரம் மற்றும் கட்டணத்திற்கான ரசீது கேட்டு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது மருத்துவமனை ஊழியர்களும், ஆரிச்சாமியின் உறவினர்களும் ஒருவரை ஒருவர் மோதிக்கொண்ட சி.சி.டி.வி. காட்சியை வைத்து போலீசார் விசாரணையை மேற்கொண்டனர். இந்நிலையில், கொரோனா நோயாளியின் உறவினர்கள் 7 பேர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை நடத்தி வருகின்றனர். தனியார் மருத்துவமனை ஊழியர்களுக்கும், கொரோனா நோயாளியின் உறவினர்களுக்கும் ஏற்பட்ட மோதல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. … The post கோவையில் தனியார் மருத்துவமனை ஊழியர்களிடம் சிகிச்சை விவரம், ரசீது கேட்டு கொரோனா நோயாளியின் உறவினர்கள் தகராறு!: 7 பேர் மீது வழக்குப்பதிவு..!! appeared first on Dinakaran.
அடுத்த நிதி நிலை அறிக்கையில் சேலத்தில் புதிய நூலகம் அமைக்கப்படுவதற்கான அறிவிப்பை எதிர்பார்க்கலாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
சட்டப்பேரவை கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் எதிரொலி : எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் உண்ணாவிரதப் போராட்டம்!!
திருச்சியில் கலைஞர் பெயரில் நூலகம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
ஒசூரில் 2000 ஏக்கரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
சட்டப்பேரவை சஸ்பெண்ட் செய்யபட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் உண்ணாவிரத போராட்டம்
தொடர் மழையால் முழுகொள்ளளவை எட்டியது பில்லூர் அணை; 14,000 கனஅடி நீர்திறப்பு: பவானி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
இடஒதுக்கீட்டின்படி தேர்வான சிவில் நீதிபதிகளுக்கான நியமன ஆணையை ஜூலை 10ம் தேதிக்குள் பிறப்பிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
முதுகுத்தண்டு உருக்குலைவால் நீண்டகாலம் அவதிப்பட்ட இலங்கை பெண்ணுக்கு சிகிச்சை: வடபழனி காவேரி மருத்துவமனை சாதனை