கோவை: பவானி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம், சிறுமுகை பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க கோவை மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல். ஆற்றில் இறங்கவோ, மீன் பிடிக்கவோ, பரிசல்கள் மூலம் ஆற்றை கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என அறிவுறுத்தல். தொடர் கனமழையால் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணை நிரம்பியது.