ஹைதராபாத்: தெலுங்கானாவில் நள்ளிரவில் பெண் ஐஏஎஸ் அதிகாரியின் வீட்டிற்குள் துணை தாசில்தார் அத்துமீறி நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநில முதலமைச்சரின் செயலாளராக பணியாற்றி வருகிறார். பெண் ஐஏஎஸ் அதிகாரி சுமிதா சபர்வால் இவரது வீட்டிற்குள் அத்துமீறி ஒருவர் நுழைந்துள்ளதை அறிந்த சுமிதா உடனடியாக பாதுகாவலருக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக, வீட்டில் சோதனை நடத்திய பாதுகாவலர்கள் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த நபரை சுற்றி வளைத்து பிடித்தனர். பிடிபட்ட நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் ஆனந்த் என்பது தெரியவந்தது. அவர் துணை தாசில்தாராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது.