அகர்தலா: 60 தொகுதிகளை கொண்ட வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் பிப்ரவரி மாதம் 16ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து வேட்பாளர்கள் போட்டியிட வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. இம்மாதம் 30ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள். ஜனவரி 31ம் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெறும். வேட்புமனுக்களை வாபஸ் பெற பிப்ரவரி 2ம் தேதி கடைசி நாள் என்று தலைமை தேர்தல் அதிகாரி சுபாசிஷ் பந்தோபாத்யாய தெரிவித்தார்.