கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் சிப்ஸ் கடையில் பயங்கர தீ விபத்து: திடீரென சிலிண்டர்கள் வெடித்துச் சிதறியதால் பரபரப்பு..!!

கேரளா: கேரளாவில் சிப்ஸ் கடையில் ஏற்பட்ட தீ விபத்தின் போது சிலிண்டர்கள் வெடித்து சிதறும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. பத்தினம்திட்டா நகர்ப்பகுதியில் செயல்பட்டுவரும் சிப்ஸ் கடையின் உள்ளே ஏற்பட்ட தீ மளமள வென கடை முழுவதும் பரவியுள்ளது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர். பொதுமக்களுடன் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது கடைக்குள் இருந்த சிலிண்டர்கள் தீடீரென வெடித்து சிதறியது.

இதை அடுத்து அருகில் இருந்த கடைகளுக்கும் தீ பரவியது. மூன்று மணிநேரத்திற்கு மேலாக போராடி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். தீ விபத்தில் இரண்டு பேருக்கு லேசான தீ காயம் ஏற்பட்டு உள்ளது. மூன்று கடைகள் முற்றிலும் சேதம் அடைந்தது. சிப்ஸ் தயாரிக்கும் பொது சிலிண்டரில் ஏற்பட்ட எரிவாயு கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related Stories: