சத்தீஸ்கரில் 3 பேரைக் கொன்ற ஆட்கொல்லி சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்ததால் மக்கள் நிம்மதி: வனத்துறையின் தீவிர முயற்சியால் சிறுத்தை பிடிபட்டது..!!

சத்தீஸ்கர்: சத்தீஸ்கரில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த ஆட்கொல்லி சிறுத்தையை வனத்துறையினர் பிடித்துள்ளனர். சத்தீஸ்கர் மாநிலம் மானேந்திர நகர் மாவட்டம் அடர்ந்த வனங்கள் கொண்ட பகுதியாக உள்ளது. அங்குள்ள ஜானக்பூரில் இரண்டு மாதங்களாக குடியிருப்பு பகுதிகளில் சிறுத்தை புலி ஒன்று உலா வந்தது. கண்ணில் பட்டவர்களை எல்லாம் தாக்கிய சிறுத்தைப்புலியால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தெருவில் நடமாட அச்சமடைந்த பொதுமக்கள் உடனடியாக சிறுத்தையை பிடிக்க கோரிக்கை விடுத்தனர். வனத்துறையினரின் தீவிர முயற்சியை அடுத்து சிறுத்தை கூண்டு வைத்து பிடிக்கப்பட்டது.

Related Stories: