மும்பை: மகாராஷ்டிர மாநிலம் மும்பை-கோவா நெடுஞ்சாலையில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் காயமடைந்துள்ளார். உயிரிழந்தவர்களில் 5 ஆண்களும், 3 பெண்களும், 1 குழந்தையும் அடங்குவர் என ராய்காட் போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது. கோவா- மும்பை நெடுஞ்சாலையில் லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. அதிகாலை 5 மணியளவில் நடைபெற்ற இந்த விபத்தில் லாரியுடன் நேருக்கு நேர் மோதியதில் கார் அப்பளம் போல நொறுங்கியது.