ஷில்லாங்: பாஜ கட்சியானது தேர்தலுக்கு முன் ஒன்று கூறுகிறது, ஆனால் அதன் பின்னர் வேறு ஒன்றை செய்வதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார். விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள மேகாலயா மாநிலத்தின் வடக்கு கரோ மாவட்டத்தில் நடந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். கூட்டத்தில் மம்தா பானர்ஜி கூறுகையில்,‘‘ பாஜ இரட்டை முகம் கொண்டது. தேர்தலின்போது எதையோ கூறுகின்றது. தேர்தல் நடந்து முடிந்த பின்னர் வேறு எதையோ செய்கின்றது.