திருமலை: என்டிஆர் மாவட்டத்தில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி அலுவலக கட்டிடத்துக்கு வாடகை பிரச்னையில் பூட்டு போட்டதால் சாலையில் படுத்து மாஜி அமைச்சர் தேவிநேனி உமா ரத்ததானம் செய்தார். ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சி முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவின் 27வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, நேற்று என்டிஆர் மாவட்டம் விஜயவாடா புறநகர் பகுதியான கொல்லப்புடி பகுதியில் ரத்ததான முகாம் உள்ளிட்ட பல்வேறு சேவை நிகழ்ச்சிகளுக்கு அக்கட்சியினர் ஏற்பாடு செய்தனர். ஆனால், தெலுங்கு தேசம் கட்சி அலுவலகம் அமைந்துள்ள கட்டிடம் வாடகை விவகாரத்தில் தகராறில் உள்ளது.