திருமலை: திருப்பதி கோயிலில் சொர்க்கவாசல் தரிசனம் நாளையுடன் நிறைவு பெற உள்ளது. மேலும், நாளை மறுதினம் இலவச டோக்கன்கள் வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி கடந்த 2ம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. வருகிற 11ம் தேதி வரை சொர்க்கவாசல் வழியாக தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதற்காக, ₹300 நுழைவு சிறப்பு தரிசனத்திற்கான 2 லட்சம் டிக்கெட்டுகளை ஆன்லைனில் தேவஸ்தானம் ஏற்கனவே விநியோகித்தது. இதுதவிர நாளொன்றுக்கு 45 ஆயிரம் இலவச டிக்கெட்டுகள் என 10 நாட்களுக்கு 4.50 லட்சம் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டது.