ஜெய்பூர்: ராஜஸ்தானில் தவுசா மாவட்டத்தை சேர்ந்த 15 வயது சிறுமி கடந்தாண்டு மார்ச் மாதம் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய 2 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த வழக்கில் 3வது குற்றவாளியான தீபக் என்ற திலீப் மீனா போக்சோவின் கீழ் நேற்று கைது செய்யப்பட்டு, சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.